சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் !

529 0

பளைப் பிர­தே­சத்­தில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வ­ரும் சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் என பிர­தேச மக்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். இது­தொ­டர்­பாக மேலும் தெரி­வித்­த­தா­வது:

பளை பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உட்­பட்ட கிளாலி, அல்­லிப்­பளை, புலோப்­பளை, முக­மாலை மற்­றும் சோரன்­பற்று போன்ற பகு­தி­க­ளில் தொடர்ச்­சி­யாக சட்­ட­ வி­ரோத மணல் அகழ்வு இடம்­பெற்று வரு­கின்­றது.

இது­தொ­டர்­பில் பொலி­ஸார் உட்­பட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மும் முறைப்­பாடு செய்­துள்­ளோம். எனி­னும், எவ­ரும் இத­னைத் தடுத்­த­தா­கத் தெரி­ய­வில்லை. மாறாக அவர்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­ற­னர். குறிப்­பாக பொலி­ஸார் மிக இர­க­சி­ய­மான முறை­யில் அவர்­க­ளுக்கு உத­வி­செய்து வரு­கின்­ற­னர்.

சட்­ட­வி­ரோ­த­மாக மணல் அக­ழப்­ப­டும் சந்­தர்ப்­பங்­க­ளில் பிர­தே­ச­வா­சி­கள் சிலர் தொலை­பே­சி­யூ­டாக பொலி­ஸா­ருக்குத் தக­வல் வழங்­கு­கின்­ற­னர். அவ்­வாறு தக­வல் வழங்­கும் நபர்­க­ளின் தொலை­பேசி உட்­பட்ட சகல விவரங்­க­ளும் பொலி­ஸார் ஊடாக மணல் கொள்­ளை­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு விடு­கின்­றன.

Leave a comment