மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு தீர்வு

234 0

நுகர்வோருக்கு மோசடியாக மண்ணெண்ணெய் விநியோகிப்பதை கட்டுப்படுத்தியதை தொடர்ந்து மீன்பிடிப்படகுகளுக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சருக்கு ஹம்பாந்தோட்டை மாவட்ட மீனவர்கள் குழு தெளிவுபடுத்தியுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர்கள் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது , கட்டுப்பாடுகள் இன்றி மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியொகிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி , எந்தவொரு பிரதேசத்திலேனும் கடற்தொழில் சமூகத்தினருக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் பிரச்சினைகள் காணப்படுமாயின் , உடனடியாக அறிவிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a comment