காங்­கே­சன்­துறை சொகுசு மாளிகை வெளி­நாட்டு முத­லீட்­டா­ள­ருக்கு!

462 0

வடக்கு மாகா­ண­ சபை, யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் கோரிக்­கை­க­ளைப் புறக்­க­ணித்து, காங்­கே­சன்­து­றை­யில் மகிந்த ராஜ­பக்­ச­வால் அமைக்­கப்­பட்ட சொகுசு மாளி­கையை வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் கைய­ளிக்­கும் முனைப்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஈடு­பட்­டுள்­ளார் எனத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

காங்­கே­சன்­து­றை­யில் முன்­னைய ஆட்­சிக்­கா­லத்­தில் சொகுசு அரச தலை­வர் மாளிகை அமைக்­கப்­பட்­டது. 20 சிறப்பு அறை­கள், சொகுசு வச­தி­கள், இரண்டு நீச்­சல் தடா­கங்­கள் மற்­றும் வதி­விட வச­தி­க­ளு­டன் அமைக்­கப்­பட்ட இந்த மாளிகை பற்­றிய இர­க­சி­யங்­கள், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­துக்­குப் பின் அம்­ப­ல­மா­கின.

இந்தச் சொகுசு மாளி­கையை தமது தேவைக்­குப் பயன்­ப­டுத்­தப் போவ­தில்லை என்று அரச தலை­வ­ரா­கப் பத­வி­யேற்ற மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்­தார்.

இந்த நிலை­யில், காங்­கே­சன்­துறை சொகுசு மாளி­கையை, தம்­மி­டம் கைய­ளிக்­கு­மாறு வடக்கு மாகா­ண­சபை கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. கல்வி மைய­மா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அத­னைத் தம்­மி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறு யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­க­மும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

Leave a comment