28 வருடங்களாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை விடுவிப்பு!

1007 0

1990ஆம் ஆண்­டி­லி­ருந்து படை­யி­ன­ரின் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்த மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை நேற்று உத்­தி­யோ­க ­பூர்­வ­மாக விடு­விக்­கப்­பட்­டது. மருத்­து­வ­மனை மற்­றும் அத­னு­டன் இணைந்த 3 ஏக்­கர் நிலப் பரப்பு மாவட்­டச் செய­ல­கத்­தி­டம் படை­த்த­ரப்­பி­ன­ரால் நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டது.

வலி­கா­மம் இடப்­பெ­யர்­வு­டன் மயி­லிட்­டிப் பிர­தே­சம் முழு­மை­யாக பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் கொண்டு வரப்­பட்­டது. மயி­லிட்­டித் துறை­மு­கம் உள்­ளிட்ட மயி­லிட்­டிப் பிர­தே­சம் விடு­விக்­கப்­பட முடி­யாது என்று கூறப்­பட்டு வந்த நிலை­யில், மயி­லிட்­டித் துறை­மு­கம் கடந்த ஆண்டு மக்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

மயி­லிட்;டி காச­நோய் மருத்­து­வ­ம­னையை பாது­காப்­புத் தரப்­பி­னர் சுற்­றுலா விடு­தி­யா­கப் பயன்­ப­டுத்தி வந்­த­னர். இத­னால் அது­வும் விடு­விக்­கப்­ப­டாது என்று கூறப்­பட்டு வந்­தது.

இந்த நிலை­யில், மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை பாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் நேற்று விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. விடு­விப்­புக்­கு­ரிய உத்­தி­யோ­க­பூர்­வக் கடி­தம், யாழ்ப்­பாண மாவட்ட மேல­திக மாவட்­டச் செய­லர் சு.முர­ளி­த­ர­னி­டம் படைத்­த­ரப்­பி­ன­ரால் நேற்றுக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

மாவட்­டச் செய­ல­கத்­தி­னால் உட­ன­டி­யா­கவே யாழ்ப்­பா­ணம் பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணி­ம­னை­யி­டம் அது ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

 

Leave a comment