அண்ணன் இறந்த சோகத்தில் தம்பி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மட்டக்களப்பு – கல்லடிப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (26) அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் பொறியியலாளரான கணேசமூர்த்தி உமாரமணனின் இளைய சகோதரனான இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும் ஊழியரான கணேசமூர்த்தி சாரோஜிதன் (வயது 21) என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அண்ணன் இறந்த துக்கத்தில் மனம் நொந்த நிலையில் தம்பி இந்த முடிவை எடுத்துள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்த துன்பியல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஒரே குடும்பத்தில் இடம்பெற்ற அகால மரணங்களால் அந்தக் குடும்படும் கல்லடி கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

