கொலம்பியா: காவல் நிலையம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு – 5 போலீசார் பலி

257 0

கொலம்பியா நாட்டின் கடலோர நகரமான பார்ரன்குய்ல்லாவில் உள்ள காவல் நிலையம் அருகே நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 5 போலீசார் உயிரிழந்தனர்.

மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவில் உள்ள கடலோர நகரமான பார்ரன்குய்ல்லாவில் நேற்று சிறப்பு பணிக்காக அருகிலுள்ள நகரங்களில் இருந்து ஏராளமான காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், காவல் நிலையத்தின் வெளியே சக்திவாய்ந்த குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது.

இந்த கோர விபத்தில் 5 போலீசார் உயிரிழந்தனர். மேலும், 42 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள மாநகர போலீஸ் பிரிகேடியர், போலீசின் உதவியுடன் இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும், அவரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

 

Leave a comment