பொங்கல் பண்டிகையை கொண்டாட வரும் 12-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

218 0

தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தை பேணிக்காக்கும் பொருட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை (12-ம் தேதி) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவச் செல்வங்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணீக்காக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகள் , கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உறுப்பு கல்லூரிகளுக்கு சிறப்பு நிகழ்வாக விடுமுறை அளித்து அரசு ஆணையிடுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment