பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை- சம்பந்தன்

14265 0

பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இக்கால தாமதத்தினால் தமிழ் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முன்னணி ஆங்கில நாளிதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரசியல் தீர்வு விடயத்தில் விரக்தியடையவோ விடயங்களை கைவிட்டுவிடவோ முடியாதென குறிப்பிட்டுள்ள சம்பந்தன், தற்போதைய சூழ்நிலையில் நமது நோக்கங்களில் தொடர்ந்தும் விடாப்பிடியாக இருந்து, விரைவானதும் வெற்றிகரமானதுமான முடிவைக் காண வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment