வித்தியா கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர் மீண்டும் விளக்கமறியலில்

495 0

சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் முதலாம் எதிரியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட போதும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் ஏ.எம்.எம். றியால் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் இன்றைய வழக்கு விசாரணையின் போது, சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு கொண்டு செல்லப்படும் நிலையில், இந்நபருக்கு பிணை வழங்க ஏன் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்பது தொடர்பாக எழுத்து மூல சமர்ப்பணத்தை செய்வதற்கு வழக்கை எதிர்வரும் 17ம் திகதி வரை ஒத்திவைக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் அதுவரை இந் நபரை விளக்கமறியிலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த நபர் வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக கைது செய்யப்படடிருந்த நிலையில் இவர் குற்றமற்றவர் என ரயல் அட்பார் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment