வவுனியாவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சி

250 0

வவுனியாவிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் தானியக்க இயந்திரத்தை உடைத்து சிலர் கொள்ளையிட முற்பட்டதாக, பொலிஸில் முறையிடப்பட்டது.

கடந்த 10ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, அவர்கள் தானியக்க இயந்திரத்தை உடைக்க முற்பட்ட வேளை, சத்தம் கேட்டு அங்கிருந்த காவலாளி அப் பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது, சந்தேகநபர்கள் அவ் இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கெமராக்களை பரிசோதித்த பொலிஸார், அது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment