முல்லைத்தீவு, அம்பாறையில் கட்டுப் பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ்!

380 0
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் 11.12.2017 நேற்று நண்பகல் செலுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் முல்லை மாவட்ட முகவர் திலகநாதன் கிந்துஜன் ஊடாக  முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் மு.வரதராஜா ஆகியோரினால் நேற்று நண்பகல் அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

Leave a comment