துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வருகை

360 0

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.

வானவில் பண்பாட்டு மையத்தின் 24-ம் ஆண்டு விழாவை ‘பாரதி பெருவிழா, தேசபக்தி பெருவிழாவாக’ நேற்று தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று விமானம் வழியே சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் வெங்கையா நாயுடுவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதுடன் சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார். இதையொட்டி, விழா நடைபெறும் பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment