கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணி இன்னும் முழுமைபெறவில்லை!

330 0

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணி இன்னும் முழுமைபெறவில்லையென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பங்காளி கட்சிகளான தமிழசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைகழகத்தின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று எதிரக்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது வியாழேந்திரன் இதனை குறிப்பிட்டார்

Leave a comment