சென்னை 4 நாட்கள் வெள்ளத்தில் மிதக்கும்: கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் எச்சரிக்கை

306 0

சென்னையில் 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பலத்த மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்படும் என கன்னியாகுமரி புயலை கணித்த ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தை ஜோதிடர் கே.என். நாராயணமூர்த்தி வெளியிட்டு வருகிறார்.

இந்த பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு அதிகமான சூறாவளி காற்று-மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும் என்றும், அனைத்து ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது.

அதே போல தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து பல ஏரிகள் நிரம்பின. பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி பாதிக்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு இருந்தது. அதே போல புயல் வெள்ளத்தால் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு புயல் வீசும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு உள்ளது. தற்போது புதிய புயல் உருவாகி உள்ளது. கடலூர், ராமேசுவரம் பாதிக்கும் என்றும் எழுதப்பட்டு உள்ளது. எனவே அந்த இரண்டு மாவட்ட மக்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மேலும் ஆற்காடு பஞ்சாங்கத்தில் இந்த ஆண்டு உறை பனி வீசும் என்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், விமான விபத்து ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மின்கசிவு ஏற்படும் என்றும் இருளில் மூழ்கும் என்றும் அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.இது குறித்து ஜோதிடர் கே.என் நாராயண மூர்த்தியை இன்று காலை போனில் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:-

9-ந்தேதி முதல் 12-ந் தேதிவரை சென்னை பாதிக்கும், உலுக்கும், மிதக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால் 4 நாட்கள் சென்னையில் பலத்த மழை பெய்து சென்னை நகரம் பாதிக்கப்படும், வெள்ளத்தில் மிதக்கும். மின்சாரம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment