சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை: பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு

250 0

அடையாறு, அசோக் நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தலைநகர் சென்னையிலும் நேற்று முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.

பல்லாவரம், கிண்டி, அண்ணா நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.

அடையாறு, அசோக் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் வடபழனி, ராமாபுரம், போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. மழை காரணமாக தென்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 38 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு இயங்கியுள்ளது.

Leave a comment