13 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

209 0

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஒக்டோபர் மாதம் குறித்த 13 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 13 மீனவர்களும் இன்று நான்காவது முறையாக தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான்  அலெக்ஸ் ராஜா கிரேசியன் 13 மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a comment