ரஞ்சனின் குரல் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

356 0

நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று காலை  உயர் நீதிமன்றில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையாகியிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவிக்கும் குரல் பதிவை எதிர்வரும் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோரால்  குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment