இந்திய மீனவர்கள் 37 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

13121 275

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதங்களில் இலங்கை கடற்படையால்  இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட இராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 37 இந்திய மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் இந்திய மீனவர்கள் 37 பேரையும் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து 37 இந்திய மீனவர்களும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a comment