மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டு!

253 0
கோப்பாய் இருபாலை வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டு விட்டு உந்துருளியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கோப்பாயைச் சேர்ந்த.  என்பவரே இரு கையிலும் படுகாயமடைந்த நிலையில் வீழ்ந்தவேளையில் தாக்குதல்தாரிகள் உந்துருளியை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின்போது யாழில் இருந்து பயணித்தவரை பின்னால் உந்துருளியில் பயணித்தவர்களே குறித்த வாழ்வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment