அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி

247 0
சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.பல்கலைக்கழக சமூகத்தால் அண்மைக்காலமாக தொடர்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.இவ் விடயம் தொடர்பில், அதிகாரத்தில் உள்ள பலராலும் பல வாக்குறுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவை பொய்த்துப்போன நிலையில், அரசுக்குதொடர்சியான அழுத்தங்களை கொடுக்க தாம் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு பேரணி, யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து நாளை காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்களை வருகைத்தருமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அரசியல் கைதிகள் தொடர்பான போராட்டங்கள் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment