கூட்டுறவு சங்க கிளை உடைத்து கொள்ளை : நால்வர் கைது.!

658 0

வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு திருடர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையின் கதவின் பூட்டினை உடைத்து உட்சென்ற திருடர்கள் அங்கிருந்து உலர் உணவு பொருட்கள், மீள்நிரப்பு அட்டை மற்றும் பணத்தினை எடுத்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் கல்மடு வீதியின் ஊடாக தப்பித்துச்சென்றுள்ளனர்.இவ்வாறு சென்ற முச்சக்கரவண்டியினை அதிகாலை 2.00 மணியளவில் கல்மடு கட்டடையர்குளத்தில் ரோந்து கடமையில் இருந்த ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்தின, உப பொலிஸ் அத்தியேட்சகர் விஜயரத்தின, பொலிஸ் கெஸ்தாபர்களான லக்ஸ்மன், சந்திரவம்ச, உப்புல் ஆகியோரினால் சந்தேகத்தின் அடிப்படையில் வழிமறித்த போதே ப.நோ.சுட்டுறவு சங்கத்தில் இருந்து திருடி செல்வது தெரியவந்ததை அடுத்து, வவுனியா, ஒமந்தை பகுதிகளில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.இதன்போது, திருடப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணையினை ஈச்சங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.

Leave a comment