சுவிசில் அடைக்கலம் கோரிய இரு இலங்கை இளைஞர்கள் கைது!

303 0

சுவிஸில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த இரு இலங்கை இளைஞர்கள் நேற்று மாலை சுவிஸ் பொலிஸாரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயமநோகரன் தர்சன் மற்றும் முகமது அசார் இன்ஃபிராஸ் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இருவரும் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் 28 மாதங்கள் சென்ற பின்னர் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்து விட்டு பதிலுக்காக காத்திருந்த வேளையில், அவர்கள் வசிக்கும் மாநில காவல்துறையால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் முறையான ஆதாரங்களை குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகளுக்கு வழங்கியிருந்த வேளையிலும் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment