கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

23667 78

வடக்கு மற்றும் வடகிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டல குழப்ப நிலை காரணமாக இவ்வாறு தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக , கடற்றொழிலில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

Leave a comment