இன்று நள்ளிரவாகும் போது நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியும் என கனிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெற்றோல், நேற்று மாலையில் இருந்து தொடர்ச்சியாக நாடு பூராகவும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இன்றைய தினம் மாத்திரம் சுமார் 5 ஆயிரம் மெட்ரிக் டன்; பெற்றோல் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 15 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளுடன் இந்தியாவில் இருந்து வரும் கப்பல் இன்று பிற்பகல் அளவில் இலங்கையை வந்தடையவுள்ளது.
மேலும் 12ம் திகதியும் மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் இலங்கை வரவுள்ளது.
இவற்றில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.