2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு

307 0

2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் அமைச்சர் பாதீடு தொடர்பான உரையை நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ளார்.

நிதி அமைச்சராக மங்கள சமரவீர பொறுப்பேற்றதன் பின்னர், அவர் முன் வைக்கும் முதலாவது பாதீடு இதுவாகும்.

அத்துடன் சுதந்திர இலங்கையின் 71வது பாதீடாகவும், தற்போதைய அரசாங்கத்தின் 3வது பாதீடாவும் இது அமையவுள்ளது.

நாடாளுமன்றத்தில் பாதீடு வாசிக்கப்படும் போது, பொதுமக்கள் பார்வையாளர் அரங்கு முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

விசேட விருந்தினர்கள் மாத்திரமே அங்கு அனுமதிக்கப்படுவர்.

அத்துடன், நாடாளுமன்ற தொகுதி மற்றும் சுற்றுவட்டத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 9ஆம் திகதி முன்வைக்கப்பட்ட, அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கல் ஆகிய துறைளுக்காக 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

முன்கூட்டிய ஒதுக்கீட்டின்படி அடுத்த ஆண்டுக்காக எதிர்பார்க்கப்படும் மொத்த செலவீனம் மூவாயிரத்து 982 பில்லியன் ரூபாவாகவும் இரண்டாயிரத்து 175 பில்லியன் ரூபா வருமானமாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை முதல் எதிர்வரும் 16ம் திகதி வரையில் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறும்.

16ம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அத்துடன் பாதீட்டின் இறுதி வாசிப்பு மீதான வாசிப்பு 17ம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 9ம் திகதி வரையில் இடம்பெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Leave a comment