வட சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் நீக்கம்

802 0

வட சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி, (மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்), சந்திரசேகர் (சிங்காரவேலன் மாளிகை பகுதி, ராயபுரம்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள்.

கழக உடன் பிறப்புகள் யாரும் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment