2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி உள்ளாட்சி தேர்தல்

537 0

201606221604336700_civic-election-based-on-2011-census-bill-tabled-in-TN_SECVPF2011-ம் ஆண்டு மக்கள் தொகை கண்டுக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வகை செய்யும் மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.சட்டசபையில் இன்று மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதிக்கு முன்பு நடைபெற வேண்டும்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் பிரிவுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது மற்றும் அதைத் தொடர்ந்து பிரிவுகளை வரையறை செய்வது போன்றவைகள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் 2013-ம் ஆண்டே பெறப்பட்டது. தற்போது 2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புபடி ஜூலை 15, 2016-ம் ஆண்டுக்குள் பிரிவுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது மற்றும் பிரிவுகளை வரையறை செய்வது ஆகியவை அந்தந்த நகராட்சி ஆணையர்கள், செயல் அலுவலர்களுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியது என அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிரிவுகளை வரையறை செய்யும் பணியானது ஜூலை 25, 2016-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதாலும் வரையறை செய்யும் பணி மிகுந்த சிரமத்தையும், கால தாமதத்தையும் ஏற்படுத்தும்.

எனவே இது தற்போதைய தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் தற்போது நடைபெற்ற சட்டப் பேரவைக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பிரிவு வாரியான வாக்காளர் பட்டியல் தயாரிக்க இயலாது.

எனவே தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலை தற்போதுள்ள பகுதி அல்லது பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டிய மன்ற உறுப்பினர்கள் அல்லது உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையினை கொண்டு நடத்தலாம் என அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கேற்ப நகராட்சி சட்டங்களில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.இந்த மசோதாவை தாக்கல் செய்தபோது எ.வ.வேலு எழுந்து தி.மு.க. சார்பாக ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தார். அதை சபாநாயகர் பதிவு செய்து கொள்வதாக அறிவித்தார்.

Leave a comment