யாழ்ப்பாணத்தில் கனமழை: 125 பேர் முகாம்களில் தஞ்சம்!

301 0

அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், பிரதீப் கொடிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த 125 பேரில், சுமார் 70 பேர் வரை வல்வெட்டித்துறை – பொலிகண்டி பொது நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே பலாலி நலன்புரி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்ததுடன் தற்போது அவர்கள் இவ்விடத்தில், தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

இதேவேளை இவர்கள் யுத்த காலத்தில் பலாலி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment