இந்தியாவில் இடம்பெற்ற ஊழல் வழக்கின் தீர்ப்பு

285 0

இந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக கருதப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்க மோசடி தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் திகதி இன்று அறிவிக்கப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசேட நீதிமன்றத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணை இடம்பெறுகிறது.

இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கணிமொழி, முன்னாள் அமைச்சர் ஏ. ராஜா போன்றவர்கள் தொடர்பு பட்டுள்ளனர்.

வழக்கின் விசாரணைகளை விசேட நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

இந்தநிலையில் அதன் தீர்ப்பை வழங்கும் திகதி இன்று அறிவிக்கப்படும் என்று இந்திய ஊடகங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு சென்ற அவரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment