பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரி உடைந்தது: விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது

283 0

பெரியபாளையம் அருகே கனமழையால் வேகமாக நிரம்பி வந்த முக்கரம்பாக்கம் ஏரி உடைந்து, விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி, படிப்படியாக தீவிரமடைந்தது. தெடர் மழையால் பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை நெருங்கி வருகின்றன. சிறுசிறு குளங்கள், ஏரிகள் நிரம்பி விட்டன. பலவீனமாக இருக்கும் ஒருசில குளங்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறத் தொடங்கியுள்ளது.

தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுகத் தொடங்கி உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்திலும் மழையின் பாதிப்பு அதிகம் உள்ளது. பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரியில் இன்று திடீர் உடைப்பு ஏற்பட்டது.  ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் விளைநிலங்களுக்குள் செல்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Leave a comment