அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 26க்கும் அதிகமானவர்கள் பலியானதாக அந்த நாட்டு பாதுகாப்பு துறையை மேற்கோள் காட்டி சர்வதேச தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் டெக்ஸாஸிலுள்ள சிறு நகரொன்றில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் 30 க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவாலயத்தினுள் நுழைந்த துப்பாக்கிதாரியொருவர், தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் காவல்துறையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.