மக்களுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் அரசாங்கம்

225 0
சிறு பிரிவினரின் பிரசாரங்களுக்கு மத்தியில் அதிகமானோருக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை நிறுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்காக உள்ள நவீன தொழில்நுட்பத்தை பிழையாக பயன்படுத்தும் சிலர் இன்று அரசாங்கம் தொடர்பில் பல்வேறு பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

சுதந்திரமான சூழலிலும், சிலர் இவ்வாறு செயற்படும்போதும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற பணிகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a comment