தமிழரசுக் கட்சியுடன் இணங்கி செயற்பட ஒருபோதும் முடியாது-சுரேஸ் பிரேமச்சந்திரன்

267 0

“ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதன்றல்ல. ஆனால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் செயற்பட ஒருபோதும் முடியாது என்பதே எமது நிலைப்பாடு”இவ்வாறு அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஈ.பி.ஆர்.எல்
எப். ஆரம்பம் முதலே உள்ளது. தமிழ் அரசுக் கட்சிதான் இடையிட்டு உள்ளிட்டது. கூட்டமைப்பிலிருந்து யாரும் பிரிந்து செல்லலாம் எனக் கூற தமிழ் அரசுக் கட்சிக்கு அருகதை கிடையாது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் எமது கொள்கைகளை ஏற்று ஓர் சின்னத்தின் கீழ் பொது இணக்கப்பாட்டுடன் முன்னணியாகக் களமிறங்க யார் முன்வந்தாலும் சேர்க்கப்படுவர்- என்றார்.

Leave a comment