உள்ளூராட்சி தேர்தல் : ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையப் போவதில்லை – துமிந்த

361 0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பேருவளையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடவுள்ளதாக இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment