டொனால்ட் டிரம்பை கொலை செய்ய பாய்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்!

6065 0

donald 600வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிட, அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை உருவி டொனால்ட் டிரம்ப்பை கொல்லப் பாய்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான வாலிபரின் பெயர் மைக்கேல் சான்ட்போர்ட்(19) என்றும் அவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. டிரம்ப்பை சுட்டுக் கொல்லும் திட்டத்துடன் 18 மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த மைக்கேல், நியூ ஜெர்சி, கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் வசித்து வந்துள்ளார்.

லாஸ் வேகாஸ் பிரச்சார கூட்டத்தின்போது டிரம்ப்பை ‘போட்டுத்தள்ளும்’ திட்டத்துடன் கலிபோர்னியாவில் இருந்து லாஸ் வேகாஸ் நகருக்கு மைக்கேல் காரில் வந்துள்ளார்.

Leave a comment