யாழ். நகரப் பகுதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் கைது!

289 0

யாழ். நகரப் பகுதியில் உள்ள கன்னியர் மடம் வீதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் நேற்றிரவு    யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். கன்னியர் மட வீதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் வாள்கள் பொல்லுகளுடன் இளைஞர் குழுவொன்று நடமாடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இதனை அவதானித்ததுடன் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தியிருந்தனர்.

அப்போது அவர்கள் பயங்கரமான வாள்களை வைத்திருந்ததாகவும் உடனடியாக அவர்கள் வைத்திருந்த வாள்களை கைப்பற்றியதுடன் குறித்த 4 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் .

Leave a comment