மீடியாகொட பகுதியில் விபத்து – இருவர் பலி, 14 பேர் காயம்

437 0
காலி – மீடியாகொட பகுதியில் சிற்றுர்ந்து ஒன்று தொடரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொரூந்தில் குறித்த சிற்றுர்ந்து மோதியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
மரணசடங்கொன்றிற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment