
ஹட்டனில் இன்று இடம்பெற்ற தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கமான தோட்ட தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பெயர் விளங்கும் வகையில் சிலோன் டி யை உலக சந்தைக்கு அறிமுகம் செய்தவர்கள்.
தனி வீடும், வீட்டுக்கான நில உரிமையையும் இன்று பெற்றதன் ஊடாக நாட்டின் உண்மையான பிரஜா உரிமை பெற்ற மக்களாக சுதந்திரமான வாழ்க்கையை வாழ அவர்களுக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.