நாளை சக­வாழ்­வுச் சங்­கத்­தின் தேசிய மாநாடு!

260 0

சக­வாழ்­வுச் சங்­கத்­தின் தேசிய மாநாடு நாளை திங்­கட்­கி­ழமை நண்­ப­கல் 12.30 மணிக்கு கொழும்பு சுக­த­தாச உள்­ளக அரங்­கில் நடை­பெ­ற­வுள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இருந்து 102 பிர­தி­நி­தி­கள் இதில் கலந்து கொள்­கின்­ற­னர். தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யா­டல் மற்­றும் அர­ச­க­ரும மொழி­கள் அமைச்­சி­னால் மாநாடு நடத்­தப்­ப­டு­கின்­றது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் பங்­கு­பற்­ற­லு­டன் மாநாடு நடை­பெ­ற இருக்கின்­றது.

கிராம அலு­வ­லர் பிரிவு வாரி­யா­கச் செயற்­ப­டும் சக­வாழ்­வுச் சங்­கங்­க­ளின் தலை­வர்­கள், செய­லா­ளர்­கள் மற்­றும் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­கள் இந்த மாநாட்­டில் கலந்து கொள்­வ­தற்குப் பிரதிநிதி­க­ளா­கத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

அந்த வகை­யில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இருந்து 102 பிர­தி­நி­தி­கள் மாநாட்­டில் கலந்து கொள்­வ­தற்கு அழைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து வச­தி­கள் மற்­றும் ஏற்­பா­டு­கள் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தின் ஒழுங்­கு­ப­டுத்­த­லின் கீழ் பிர­தேச செய­ல­கங்­க­ளி­னால் செய்­யப்­பட்­டுள்­ளன.

Leave a comment