அரி­யா­லை­யில் ஓர் உயிர் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளது!

457 0
 போர்க் காலத்­தில் சாதா­ர­ண­மாக மலிந்து கிடந்த துப்­பாக்­கிச் கூட்­டுக் கொலை­கள் அதன் பின்­னர் மெல்ல மங்­கிப்­போ­யின. வாள்­வெட்­டுக்­கு­ழுக்­கள் தலை தூக்­கு­வ­தா­கப் பொலி­சா­ருக்கு எதி­ரா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­தது.

அந்­தக் குற்­றச் சாட்டை மழுங்­க­டிக்க இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளின் உயிர்­கள் கொக்­கு­வி­லில் பொலி­சா­ரின் துப்­பாக்­கி­ க­ளால் காவு கொள்­ளப்­பட்­டன.

வட­ ம­ராட்­சி­யில் கள்ள மண் ஏற்­று­ப­வர்­க­ளி­டம் பொலி­சார் கப்­பம் வாங்­கு­கி­றார்­கள் என்ற குற்­றச்­சாட்டு உச்­சம் பெற்­ற­போது துன்­னாலை இளை­ஞன் மீது துப்­பாக்­கிச் சூடு நடாத்­தப்­பட்­டது.

வித்­தியா கொலை வழக்­கின் தீர்ப்பை உல­கமே எதிர்­பார்த்­தி­ருந்த வேளை­யில் நீதி­பதி இளஞ்­செ­ழி­யன் மீது துப்­பாக்­கிச் சூடு இடம்­பெற்­றது. தற்­போது அர­ச­மைப்பு விவா­தம் மீதான எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ள­போது, மீண்­டும் ஒரு துப்­பாக்­கிச் சூடு அரங்­கே­றி­யுள்­ளது.

அரி­யா­லை­யில் ஓர் உயிர் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளது. வடக்­கைத் தொடர்ந்­தும் பதற்­றத்­தில் வைத்­தி­ருந்து அர­சி­யல் செய்­யும் முயற்­சி­யின் சதியா இது? என்று கேள்­வி­கள் பல­வும் எழுந்­துள்­ளன. ஏனெ­னில் இலங்கை அர­சி­ய­லில் புரை­யோ­டிப்­போ­யுள்ள சூழ்ச்­சி­கள், தந்­தி­ரங்­கள் இன்­று­வரை அக­லவே இல்லை.

படை­கள் எவ்­வ­ழியோ அரசு அவ்­வழி

தமிழ் மக்­கள் நிம்­ம­தி­யா­கவோ அல்­லது நிரந்­த­ரத் தீர்­வு­டனோ வாழக் கூடாது என்­ப­தில் ஆட்­சி­யே­றும் அர­சு­கள் என்­றுமே உறு­தி­யா­க­வுள்­ளன.

இந்த விட­யத்­தில் அவை ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­டு­கின்­றன. காலத்­துக்குக் காலம் அர­சி­யல் ரீதி­யிலோ அல்­லது இரா­ணுவ ரீதி­யிலோ சரி தமி­ழர் தரப்­புக்கு ஒரு படி முன்­னேற்­றம் ஏற்­ப­டு­வது தென்­பட்­டால், அதனை மழுங்­க­டிப்­ப­தற்­கா­கச் சிங்­கள தேசம் பூதா­கா­ர­மான ஏதா­வது ஒரு விட­யத்­தி­னைக் கிள்­ளி­வி­டு­வது வழமை.

அதைக் கன­கச்­சி­த­மாக நிகழ்த்­திய பலரே ஆட்­சி­யி­லும் நிலைக்­கி­றார்­கள். அர­சன் எவ்­வ­ழியோ குடி­மக்­க­ளும் அவ்­வழி என்­பர். எமது நாட்­டில் படை­கள் எவ்­வ­ழியோ ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவ்­வ­ழியே என்ற மரபே பின்­பற்­றப்­ப­டு­கி­றது.

அதா­வது அர­சி­யல் தீர்­வில் தமி­ழர்­க­ளுக்­குச் சம­உ­ரி­மை­கள் கிடைக்க கூடாது என்­ப­தில் இணைந்தே சதி­செய்­கின்­ற­னர்.

ஏனெ­னில் வடக்­கில் குறிப்­பாக 2015 மற்­றும் 2016களில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் வாள்­வெட்­டுக் கலாச்­சா­ரம் தலை­தூக்­கி­யது. அப்­போது அதனை அடக்க வேண்­டிய பொலி­சார் கைகட்டி வேடிக்கை பார்த்­த­னர்.

அத்­தோடு அந்­தக் குழுக் களுக்கும் பொலி­சா­ருக்­கும் நெருங்­கிய தொடர்பு உண்டு என்­றும் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.

சூடு­க­ளும் பின்­ன­ணி­யும்

வாள்­வெட்டை அடக்­க­வேண்­டிய தேவை எழுந்­த­தன் விளை­வாக 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி இரண்டு பல்­க­லைக் கழக மாண­வர்­கள் கொல்­லப்­பட்­ட­னர். அது நடந்து ஓர் ஆண்டு கடந்து விட்­டது. இருந்­தும் வாள்­வெட்­டுக்­கும் தீர்­வில்லை. சுட்­டுப்­ப­டு­ கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் நீதி­யில்லை.

வாள்­வெட்­டுப் பேச்­சுக்­க­ளும் மங்­கின. கார­ணம் அந்­தச் சூட்­டின் பிர­தி­ப­லிப்பே. அடுத்து மணல்­கொள்ளை, மணல் தட்­டுப்­பாடு என்­பன பூதா­கா­ர­ மா­கின. சில­ரி­டம் பொலி­சார் கப்­பம் பெற்று மணல் கடத்த அனு­ம­திக்­கின்­ற­னர் எனக் குடத்­தனை மக்­கள் பகி­ரங்­க­மா­கவே குற்­ற­மும் சாட்­டி­னர்.

அதன் விளை­வாக இந்த ஆண்­டின் ஜுலை மாத ஆரம்­பத்­தில் குடத்­தனை இளை­ஞன் ஒரு­வர் சுடப்­பட்­டார். பின்­னர் நீதி­பதி இளஞ்­செ­ழி­யன் தொடர்­பு­பட்ட அந்­தச் சூடு, கடந்த யூலை மாதம் 23ஆம் திகதி நடந்­தது. மக்­கள் அனை­வ­ரின் கவ­ன­மும் இதன்­பால் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.

தற்­போது, கடந்த ஒக்­ரோ­பர் 22ஆம் திகதி அரி­யாலை –உத­ய­பு­ரம் பகு­தி­யில் இளை­ஞர் சுடப்­பட்­டி­ருக்­கி­றார். இது சம­கா­லத்­தில் நடந்­து­கொண்­டி­ருக்கும் புதிய அர­ச­மைப்பு விமர்­ச­னங்­க­ளைக் குறைப் ப­தற்­காக இருக்­க­லாம் என்றே நம்­பப்­ப­டு­கி­றது.

மண்­டை­தீ­வில் தேடு­தல்

அண்­மைய சூட்­டில் கொல்­லப்­பட்­ட­வர் பற்றி வெளி­வ­ரும் செவிக்­க­தை­க­ளில் அரச படை­யி­னரே இதை மேற்­கொண்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இதே­நே­ரம் இங்கு அர­சு­கள் மாறு­கின்­றன, தவிர முப்­ப­டை­க­ளின் தள­ப­தி­கள் மாற்­றப்­ப­டு­கின்­ற­னர், ஆனால் படை­யி­னர் மகிந்த காலத்­தில் இருந்த படை­யி­னரே.

தற்­போ­தும் உள்­ள­னர். இலங்­கை­யில் தற்­போது சுமார் 2இலட்­சத்து 50ஆயி­ரம் இரா­ணு­வச் சிப்­பாய்­கள் உள்­ள­னர். இந்­தச் சூட்டு விட­யத்­தில் கடற்­ப­டை­யி­னரே சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அண்­மை­யில் மண்­டை­தீ­வுக் கடற்­படை முகா­மில் தேடு­தல் நடத்­தப்­பட்­டது இத­னா­லேயே. போர் ஓய்ந்து பணி­கள் இல்­லா­ம­லி­ருக்­கும் இவர்­களை வைத்தே அதிக சதி­கள் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன என்று தற்­போது பொது­வெ­ளி­யில் விச­னங்­கள் வெளி வரு­கின்­றன.

தீர்­வு­க­ளில் முரண்­போக்கு

ஆரம்­பத்­தில் ஒரு அர­ச­மைப்­புத் திருத்­தத்­தைக் கொண்­டு­வர முற்­ப­டு­கை­யில் ஒரு தரப்பு பாத­யாத்­திரை சென்று அதை இல்­லா­மல் செய்­த­தும், அதே­போன்று ஒரு தரப்பு தீர்வை முன் வைக்க, மறு­த­ரப்பு அதைக் கிழித்­தெ­றிந்து, தீயிட்ட நிகழ்­வு­க­ளும் உள்ளன.

இரண்டு பெரும் கட்­சி­கள், மாறி மாறி எதிர்த்த கட்­சி­கள் இன்று ஒன்று சேர்ந்து சிறு­பான்மை மக்­க­ளின் மன­தைப் புரிந்து, நல்­ல­தொரு தீர்வை வழங்­குவார்­களா அல்­லது இரண்டு கட்­சி­ க­ளும் இணைந்து சது­ரங்க விளை­யாட்டு விளை­யாடி ஒற்­று­மை­யா­கச் சண்டை
பிடித்து இப்­போ­தும் அதைக் குழப்­பிக் கொண்டே இருக்­கி­றார்­களா என்­கின்ற சந்­தே­கம் பல­மா­கி­விட்­டுள்­ளது.

அர­ச­மைப்­புத் தீர்­வில் எதா­வது கிடைக்­குமா எனக் காத்­தி­ருக்­கும் தமி­ழர்­க­ளைத் திசை­தி­ருப்பி, இளை­யோர்­களை ஆத்­தி­ர­மூட்டி மீண்­டும் ஓர் இளை­ஞர்­கள் அழிப்­புக்கு வித்­தி­டு­கி­றார்­களோ என்­று­கூ­டச் சந்­தே­கங்­கள் எழா­ம­லில்லை.

ஏனெ­னில் இங்கு நடக்­கும் ஒவ்­வொரு துப்­பாக்­கிச் சூட்­டுக்­குப் பிற­கும் போராட்­டம், கத­வ­டைப்பு என இளை­ஞர்­கள், மக்­கள் அந்­தப் பக்­கமே திசை திருப்­பப்­ப­டு­கி­றார்­கள்.

சட்­டமா அதி­ப­ரின் விநோ­தம்

இலங்கை அர­சி­ய­லில் என்ன இடம்­பெ­று­கின்­றது என எவ­ருக்­குமே விளங்­காத நிைலமை காணப்­ப­டு­வது வழ­மை­தான். நாட்­டின் ஜன­நா­ய­கம் , மற்­றும் பாது­காப்பு, எவற்­றில் எவர் அதி­கா­ரம் கொண்ட முடிவை எடுக்­கின்­ற­ார் என்­ப­தில் மூடிய ஆட்­சி­யா­கவே இந்த ஆட்சி உள்­ளது.

இங்கே அரச தலை­வரை மிஞ்­சிய முடிவை எடுக்­கும் சட்­டமா அதி­பர் இவ்­வாறு இடம்­பெ­றும் சூட்­டுக் கொலை­கள் தொடர்­பில் வாய் திறப்­பதே கிடை­யாது. அல்­லது அதற்­குச் சட்ட நட­வ­டிக்­கை­யும் கிடை­யாது.

சாட்­சி­க­ளுக்­குப் பாது­காப்­பில்லை எனக்­கூறி வவு­னி­யா­வில் இடம்­பெ­றும் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்கை அனு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றத்­து­டிக்­கும் சட்­டமா அதி­பர் இங்கே ஒரு மாகா­ணத்­தின் மக்­களே பாது­காப்­பில்­லா­மல் இருக்­கி­றார்­கள் இதற்கு என்ன நட­வ­டிக்கை எடுத்­தார் என்று வினா­வி­னால், பதில் பூச்­சி­ய­மா­கவே உள்­ளது.

அண்­மைய சூடு ஆரம்­பத்­தில் மண்­டை­தீ­வுக் கடற்­ப­டை­யி­னர் பக்­கம் கவ­னத்­தைத் திருப்­பி­யது. குறித்த சம்­ப­வத்­தினை நடத்­தி­யது கடற்­ப­டை­யி­னர்­தான் எனப் பேச்­சுக்­கள் எழுந்­தன. அங்கு தேடுதலும் நடத்தப்பட்டது.

இந்­தச் சூடு ஒரு முச்­சக்­கர வண்­டி­யில் சென்று நடாத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. சுட்ட பின்பு ஓடிச் சென்று வெற்­றுத் தோட்­டாக்­க­ளைப் பொறுக்கி எடுத்த பின்பு மீண்­டும் அதே முச்­சக்­கர வண்­டி­யில் ஆயு­த­தாரி தப்­பிச் செல்­லும் காட்சி துர­திஸ்ட வச­மாக அரு­கில் உள்ள சி.சி.ரி கம­ரா­வில் பதி­வா­கி­யி­ருக்­கி­றது.

அந்த முச்­சக்­கர வண்­டி­யா­னது பாது­காப்பு அமைச்­சின் பதி­வில் உள்­ள­தா­க­வும். அது சிறப்பு அதி­ர­டிக் படை­யி­ன­ரு­டை­யது என்­றும் செய்­தி­கள் வெளி­யா­கி­யுள்­ளன. ஆக, இந்­தச் சூட்­டை­யும் படைத்­த­ரப்பே மேற்­கொண்­டுள்­ளது என்­பது இப்­போது தெரிய வந்­தி­ருக்­கி­றது.

Leave a comment