மட்டக்களப்பு, கிரான்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மமன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இக்கோவிலில், நேற்று (24) இரவு 8 மணியளவில் இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஆலயத்தின் கிழக்கு வாசல் கதவு உடைக்கப்பட்டு சுமார் ஒன்றரை இலட்சம் பெறுமதிவாய்ந்த தங்க நகைகளான பொட்டுத்தாலி 4, தாலிக்காய் 2 மற்றும் ஒரு மாலை என்பனவற்றை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிசாரின் உதவியுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.