சிறந்த சமய பின்னணியிலேயே சிறந்த சமூகமொன்றினை கட்டியெழுப்ப முடியும் –மைத்ரிபால சிறிசேன

Posted by - October 30, 2017

நாட்டில் சிறந்த சமயப் பின்னணியினை ஏற்படுத்துவதன் ஊடாகவே விழுமியப் பண்புகளையுடைய சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (30) மாத்தளை, மில்லவான மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் பௌத்த சங்க சபையின் 14 ஆவது வருடாந்த சம்மேளனத்தின் நிறைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். உலகம் பூராகவும் காணப்படும் தேரவாத, மகாயான, தந்திரயான, வஜ்ரயான மற்றும் சென் பௌத்த மதப் பிரிவுகளை சேர்ந்த இளம் பிக்குமார்

கார்லஸ் பியுஜ்மன்ட் மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை- ஸ்பெயின்

Posted by - October 30, 2017

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்பெயின் – கட்டலோனிய பிராந்தியத் தலைவர் கார்லஸ் பியுஜ்மன்ட், மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்று ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் அவர் சிறைக்கு செல்லாதவராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்துக் கொள்ளும் கட்டலோனிய பிராந்தியத்தின் முயற்சி தோல்வியில் நிறைவடைந்தது. தற்போது குறித்த பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரம் நீக்கப்பட்டு, அதன் முழுக் கட்டுப்பாடும் ஸ்பெயின் அரசாங்கத்திடம் உள்ளது. தனிநாட்டுக்கான முயற்சியை வழிநடத்தியமைக்காக முன்னாள் பிராந்தியத் தலைவர்

சவுதி அரேபியா பெண்களிற்கு விளையாட்டு அரங்குகளுக்கு செல்ல அனுமதி

Posted by - October 30, 2017

சவுதி அரேபியாவில் பெண்கள் அனைவரும் விளையாட்டு அரங்குகளுக்கு செல்வதற்கு முதன்முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த அனுமதி அமுலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்கள் தொடர்பான பல இறுக்கமான சட்டங்களை பின்பற்றி வரும் சவுதி அரேபியா, அண்மைக்காலமாக அந்த இறுக்கமான விதிமுறைகளை தளர்த்தி வருகிறது. இதுவரையில் பெண்களுக்கு வாகனங்கள் செலுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதன்படி தற்போது பெண்கள் விளையாட்டு அரங்குகளுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படவுள்ளதாக

இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம்

Posted by - October 30, 2017

அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் தற்சமயம் இடம்பெறுகின்றது. இன்று முற்பகல் ஆரம்பமான விவாதம் மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை கடந்த 21ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான விவாதமே தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே, அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்கட்சி இன்று முற்பகல் அடையாள எதிர்ப்பொன்றை மேற்கொண்டனர். நாடாளுமன்ற

அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது- பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Posted by - October 30, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஒன்றியத்தின் பதில் இணைப்பாளர் மங்கல மத்துமகே இதனை தெரிவித்தார். மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்க கோரி கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுவரும் சத்தியாகிரக கூடாரத்தில் வைத்து இன்று அவர் இதனைத் தெரிவித்தார். இதனிடையே, மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள

மகிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

Posted by - October 30, 2017

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரது கடவுச்சீட்டை இன்று நீதிமன்றத்தில் சமர்;ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த கடவுச் சீட்டு இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்க்படாதநிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மகிந்தானந்த அலுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்டபோது, பாடசாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட கரம் பலகை மற்றும் தாம் பலகைகளை வேறுநபர்களுக்கு வழங்கியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

புத்தளம் வீதியில் விபத்து- 3 பேர் காயம்

Posted by - October 30, 2017

சிலாபம் புத்தளம் வீதியின் காவலரண் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெப் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கெப் ரக வாகனத்தில் பயணத்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஒமந்தை வீதியில் விபத்து- 24 பேர் காயம்

Posted by - October 30, 2017

வவுனியா – ஒமந்தை ஏ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை எற்றி வந்த பேருந்து பால் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி வந்த பேரூந்து ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியில் வைத்து, எதிர் திசையில் வந்த பால் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் காயமடைந்த பேரூந்தில் பயணித்த 24 பேர் வவுனியா வைத்தியசாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை

அமைதி வழி போராட்டம்

Posted by - October 30, 2017

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அமைதி வழி போராட்டம் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை சிவன்கோயிலடி வளாகத்தில் இந்த கனவ ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

புதிய அரசியல் அமைப்பு சாத்தியமற்றது- டிவ் ஜெயரத்ன

Posted by - October 30, 2017

புதிய அரசியல் அமைப்பு நடைமுறை சாத்தியமற்றதென கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டிவ் ஜெயரத்ன தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். அரசியல் அமைப்பின் போர்வையில் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை மறைப்பதற்கான முயற்சியொன்றே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.