மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தர்(காணொளி)

Posted by - October 31, 2017

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றிவந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தரின் சடலம் இன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மகிலூரைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தரான சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் களுவாஞ்சிகுடி  நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மரணமடைந்தவரின் உறவினர்களினால் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி

யாழ்ப்பாணத்தில் கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் (காணொளி)

Posted by - October 31, 2017

யாழ்ப்பாணம் காக்கைதீவில் அமைந்துள்ள யாழ் மாநகர சபையின் மீள்சுழற்சி அலகின் ஒரு பகுதியில் கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் 126 மில்லியன் ரூபா நிதி ஒத்துகீட்டில், கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. கழிவு நீர் பரிகரிப்பு திட்டமானது, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசனால் திறந்து வைக்கப்பட்டது. யாழ் மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கழிவு நீர் பரிகரிப்பு திட்டத்தைச்

நுவரெலியாவில் இரண்டு பிரதேச சபைகள் உருவாக்குவது தொடர்பில் எதிர்ப்புக்கள் (காணொளி)

Posted by - October 31, 2017

நுவரெலியாவில் அம்பகமுவ பிரதேசத்தில் உருவாக்கப்படும் மேலும் இரண்டு பிரதேச சபைகளினால் அங்கு வாழ்கின்ற இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகள் ஏற்படுவதை எதிர்த்து கினிகத்தேனை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மலையக முற்போக்கு முன்னணியின் ஏற்பாட்டில் முன்னால் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தாராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கினிகத்தேனை நகரில் முன்னெடுப்பதற்கு ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு ஒன்று பிறபிக்கப்பட்டிருந்தது. எனினும், நகரில் வாகனங்களுக்கு இடையூறு

மீனவர்கள் எச்சரிக்கை!

Posted by - October 31, 2017

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குக் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று வீசும் என்றும், இதனால் அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மணிக்கு சுமார் 70 முதல் 80 மைல் வேகத்துக்குக் காற்று வீசலாம் என்றும் இதனால் குறிப்பாக, காலி முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – 5 பேர் காயம்

Posted by - October 31, 2017

அம்பலங்கொடை – படபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் மூன்று சிறுவர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,கொஸ்கொட பிரதேசத்தின் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை , இரண்டு மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டார் வர்த்தக அமைச்சர் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - October 31, 2017

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கட்டார் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஷேய்க் அஹமட் பின் யஸீம் அல்தானி மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை – கட்டார் ஒன்றிணைந்த பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள கட்டார் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் பயனற்றது – விமல்

Posted by - October 31, 2017

நாடாளுமன்றத்திற்கு குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவேண்டும் என மேற்கொண்டிருந்த அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச  தெரிவித்திருந்தார். கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கொன்றில் முன்னிலையான பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் இன்று பதிலளித்திருந்தார். இதன்போது , நாட்டுக்கு ஏற்ற வகையில் சட்டத்தை இயற்ற புதிய அரசியலமைப்பின் மூலம் இயலாமல் போயுள்ளதன் காரணமாக நாடாளுமன்றம் பயனற்றது என அவர் தெரிவித்திருந்தார்.

மஹிந்தவின் தனிப்பட்ட செயலாளர்உள்ளிட்ட மூன்று பேரின் வௌிநாட்டு பயணங்கள் தடை

Posted by - October 31, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகவும் ஜனாதிபதி அலுவலக பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்த காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பேரின் வௌிநாட்டு பயணங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளன. காவற்துறை நிதி குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இவர்களின் வௌிநாட்டுப் பயணங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்க தீர்மானம்

Posted by - October 31, 2017

கனியவள கூட்டுத்தாபனம் எதிர்வரும் தினத்தில் எரிபொருளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் , கனியவள கூட்டுத்தாபனத்தின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு எதிர்வரும் தேர்தல் மற்றும் பாதீட்டை இலக்காக வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 26ம் திகதி கனியவள கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது , கனியவள கூட்டுத்தாபனத்தின் ஓகஸ்ட் மாத இலாபம் 7 ஆயிரத்து 729 மில்லியன் ரூபாய் எனவும் செப்டம்பர் மாதத்தில் அந்த கூட்டுத்தாபனத்தின் இலாபம் 9 ஆயிரத்து 630 மில்லியன் ரூபாய் எனவும்

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் – அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 31, 2017

நுவரெலிய மாவட்டத்தின் பிரதேச சபைகளை 6 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த அனுமதி கிடைத்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நுவரெலியா பிரதேச சபை அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை ஆகிய மூன்று பிரதேச சபைகளாக அதிகரிக்கப்படவுள்ளது. அம்பகமுவ பிரதேச சபை மஸ்கெலியா மற்றும் நோர்வூட் ஆகிய மூன்று பிரதேச