பன்னாட்டு கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை ; பாகிஸ்தான், இந்தியாவையடுத்து பாரிய சீன போர்கப்பல் வருகை

Posted by - November 5, 2017

இந்து சமூத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. அமெரிக்கா , இந்தியா , பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் பாரிய போர் கப்பல் ஒன்று இவ்வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது.  இந்த போர் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக  கடற்படை உறுதிப்படுத்தியது. கடந்த இரண்டு வாரத்திலிருந்து இன்றுவரையில் இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், அமெரிக்கா , இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் போர்க்கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டன. இன்று பாகிஸ்தானின்  பி எஸ்

திருப்பியனுப்பப்பட்ட தரமில்லாத எண்ணெய்க் கப்பல் இன்னும் திருகோணமலையில்

Posted by - November 5, 2017

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் (எல்.ஐ.ஓ.சி.) பொய்யான பிரச்சாரத்தின் ஊடாக நாட்டில் எண்ணெய் நெருக்கடியை ஏற்படுத்தி திருப்பியனுப்பப்பட்ட எண்ணெய்க் கப்பலிலுள்ள எண்ணெய்யை நாட்டில் இறக்குமதி செய்ய முயற்சித்து வருகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பொது ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் நாட்டுக்குள் இறக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அச்சங்கம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

ஸ்ரீ ல.மு.கா. ஸ்தாபகர் அஷ்ரபின் மரணம் தொடர்பான அறிக்கை மாயம்

Posted by - November 5, 2017

முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் ஸ்தாபகருமான எம்.எச்.எம். அஷ்ரப் விமான விபத்தில் பலியானமை தொடர்பில் கண்டறிய நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2000 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்தனர். இவர்களது மரணம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவின. இதனைக் கண்டறிவதற்காகவே அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. நீதிபதி எல்.கே. ஜீ.

ராணுவத் தலைமையகத்தில் பொருட்களை திருடிய மூவர் கைது

Posted by - November 5, 2017

பெலவத்த – அக்குரேகொட பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுவருகின்ற இராணுவத் தலைமையகத்தில் பொருட்களை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்களும் பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பனாபிட்டிய மற்றும் கோட்டேகொட பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சைட்டம் தனியார் பல்கலைக் கழக செயல்பாட்டாளர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - November 5, 2017

மாலபே தனியார் பல்கலைக் கழகம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த யோசனைகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறு சைட்டம் தனியார் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவர் செயல்பாட்டாளர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். இந்த யோசனையின் அடிப்படையில், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாக சைட்டம் மருத்துவ பீட மாணவர் செயல்பாட்டாளர் சங்கத்தின் தலைவர் சாந்தத சேரம் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு

Posted by - November 5, 2017

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சுவிஸ்சலாந்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெருமா மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் கலந்து கொண்டனர். மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்றமை உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதற்கு அமைய நேற்று

8 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

Posted by - November 5, 2017

இந்நாட்டு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் 8 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கடற்றொழிலாளர்களிடம் இருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் , மற்றும் அவர்கள் பயணித்த படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதில் சட்ட மா அதிபராக தப்புல டி லிவேரா

Posted by - November 5, 2017

பதில் சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இப்பதவிக்கு தப்புல டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் நீதிபதிகள் குழுவில் பிரதானியாக தப்புல டி லிவேரா செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பம்

Posted by - November 5, 2017

ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட் கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளது. இலங்கை தொடர்பான மீளாய்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. மேலும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கை வெளியிடப்பட உள்ளது. போரின் பின்னரான நிலைமைகளில் மனித உரிமைகள் பேரவை பல்வேறு பரிந்துரைகளை இலங்கை தொடர்பில் முன் வைத்துள்ளது. இவற்றுள் பல தீர்மானங்களும் உள்ளடங்குகின்றன. மனித உரிமைகளை