வருமானவரி சோதனைக்கு ஓ.பி.எஸ் காரணம்: தங்க தமிழ்செல்வன்

Posted by - November 9, 2017

டி.டி.வி. தினகரன், திவாகரன் குடும்பத்தினர் வீடுகளிலும், ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெறுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதல் தான் காரணம் என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா நிதி உதவி

Posted by - November 9, 2017

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் பிரிவு வழங்க உள்ளது. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும் அது தொடர்பிலான திட்ட முன்மொழிவுகளுடன் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. மதச் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு இலங்கையின் அனைத்து மட்ட அதிகாரிகளும் முனைப்பு காட்ட வேண்டுமெனவும், பூரண மதச் சுதந்திரம் காணப்படுவதாகவே நாட்டின் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. தங்களது சுய விருப்பின்

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் – ராமதாஸ்

Posted by - November 9, 2017

ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மன்னார்குடி-தஞ்சையில் தினகரன், திவாகரன் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமானவரி துறையினர் சோதனை

Posted by - November 9, 2017

சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலனறுவையில் வெடிக்காத துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

Posted by - November 9, 2017

பொலனறுவை, பராக்கிரம நீரேந்துப் பகுதியில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த 126 துப்பாக்கி ரவைகளை பொலிஸார் கைப்பற்றினர். டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்தக் குளக்கட்டுப் பகுதியைச் சுத்தம் செய்த தோப்பாவெவ வித்தியாலய மாணவர்களே இந்த ரவைகளைக் கண்டுபிடித்தனர். இதுபற்றி மாணவர்கள் தெரிவித்ததையடுத்து, ஆசிரியர்கள் பொலிஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த பொலிஸார் மேற்படி ரவைகளை மீட்டெடுத்தனர். ரி-56 ரகத் துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய இந்த ரவைகள் துருப்பிடித்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகிந்தவின் காரியாலயப் பணிப்பாளர் நீதிமன்றில் ஆஜர்

Posted by - November 9, 2017

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காரியாலயப் பணிப்பாளர் காமினி செனரத் இன்று  (9) காலை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார். நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு விடுத்த கோரிக்கையை அடுத்து காமினியுடன் மற்றும் இருவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தற்போது, நிதி மோசடிக் குற்றச்சாட்டு குறித்து காமினி செனரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

ஜெயா டி.வி. அலுவலகம்-சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

Posted by - November 9, 2017

சென்னையில் ஜெயா டி.வி. அலுவலகம், சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

மொழி அலுவலர்கள் 1000 பேர் ஜனவரியில் நியமனம்

Posted by - November 9, 2017

அரச நிறுவனங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மொழி அலுவலர்கள் ஆயிரம்பேரை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விண்ணப்பதாரிகள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழியில் திறமைச் சித்தி பெற்றிருப்பதுடன், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் சாதாரண சித்தியேனும் பெற்றிருக்க வேண்டும். அதேநேரம், உயர் தரத்தில் ஏதாவது ஒரு பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும். இந்தத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள ஆயிரம் பேருக்கு ஜனவரியில் நியமனம்

போயஸ் கார்டனையும் விட்டு வைக்கவில்லை: ஜெயா டிவி பழைய அலுவலகத்தில் வருமான வரி சோதனை

Posted by - November 9, 2017

ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி பழைய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது.

தாஜுதீன் கொலை: தொலைபேசி இலக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளன- புலனாய்வுத் துறை

Posted by - November 9, 2017

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் காணப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் நேற்று (08) அறிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள இலக்கங்களுக்குரியவர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் பலவற்றிடம் தகவல் பெறப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் ஜெயராம் ட்ரொக்ஸியிடம் தெரிவித்துள்ளது.