ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தனக்கும் உடன்பாடு இல்லை- ராஜித சேனாரத்ன

Posted by - January 5, 2017

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தனக்கும் உடன்பாடு இல்லையென சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான உத்தேச வாக்காளர் பதிவு

Posted by - January 5, 2017

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான உத்தேச வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட செயற்பாட்டுக்கால எல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது வாக்குகளை அளிக்கும் உரிமையினை பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட விசேட ஏற்பாடுகள் சட்டசெயற்பாட்டுக்கால எல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் கைது(காணொளி)

Posted by - January 5, 2017

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் இரண்டு படகுகளில் மூலம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அளவி எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த

பழைமை வாய்ந்த எஹெலகல வாவியின் புனரமைப்பு பணி என்ற போர்வையில் சட்டவிரோத மண் அகழ்வு

Posted by - January 5, 2017

சிகிரியா மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற மண் அகழ்வு தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிஹாரே, விவசாய சேவைகள் பிரதி ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். பழைமை வாய்ந்த எஹெலகல வாவியின் புனரமைப்பு பணி என்ற போர்வையில் இந்த மண்அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெகோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, பாரியளவிலான குழிகள் தோண்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு

Posted by - January 5, 2017

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு யாழ்ப்பாணத்தில் இம்மாதம் திறந்துவைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரவித்துள்ளார். யாழ்ப்பாண கொன்சியூலர் பிரிவு இம்மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்த்தில் திறந்துவைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண கொன்சியூலர் அலுவலகத்தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் கோகுல ரங்கன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். அலுவலக திறப்பு விழா நிகழ்விற்கு வடக்குக் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட இருப்பதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்படவுள்ள

பதுளை தபால் ரயிலில் வெடி குண்டு உள்ளதாக பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய யுவதிக்கு பிணை

Posted by - January 5, 2017

  பதுளை தபால் ரயிலில் வெடி குண்டு உள்ளதாக பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய யுவதியை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 18 வயதான யுவதியை 2 லட்சம் ரூபா வீதமான சரீர பிணையில் கீழ் விடுவிக்குமாறே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதிக்கு நீதவான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், நீதவானினால் யுவதியின் பெற்றோருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த யுவதியின் காதலன், தனது நண்பர்களுடன் கடந்த 26ஆம்

ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார்

Posted by - January 5, 2017

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். தமிழகத்தில் கடந்த 10 வருடங்களில் நடைபெறாத சந்திப்பு ஒன்று நேற்று மாலை சென்னைத் தலைமமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சுமார் 25 நிமிடங்கள் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும்

ஈராக் இராணுவத்தினருக்கு உதவும் வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 5, 2017

வடக்கு ஈராக்கின் மொசூலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடி வரும் ஈராக் இராணுவத்தினருக்கு உதவும் வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக் படையினருக்கு உதவும் பெரும்பாலான இராணுவ ஆலோசகர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகரை மீட்டெடுக்க நடந்து வரும் போரில் தாங்கள் புதிய உத்திகளை கையாளப் போவதாக அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

மஹரகம வைத்தியசாலையில் பணியாற்றும் 14 வைத்தியர்கள் ஒரே தடவையில் வெளிநாடு சென்றுள்ளார்கள்- ராஜித்த சேனாரத்ன

Posted by - January 5, 2017

  மஹரகம வைத்தியசாலையில் பணியாற்றும் 14 வைத்தியர்கள் ஒரே தடவையில் வெளிநாடு சென்றமை, பிரச்சினைக்குரிய விடயம் என்பதனால், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். நோர்வேயில் நடைபெறவுள்ள மாநாடொன்றில் கலந்துக்கொள்வதற்காக குறித்த வைத்தியர்கள் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவிற்காக புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஜே.எம்.முஸம்மிலுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted by - January 5, 2017

கொழும்பு முன்னாள் மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மலேசியாவிற்காக புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமையை அடுத்து விசேட நிகழ்வொன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு கிங்ஸ்பெரி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விசேட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்விற்கு வருகைத் தந்திருந்த ஜனாதிபதி, மலேசியாவிற்காக புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஜே.எம்.முஸம்மிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.