மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும்- முஸ்லிம் அமைச்சர்கள்

Posted by - January 6, 2017

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற வில்பத்து விவகாரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கலந்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், புத்திஜீவிகளும் இதனை வலியுறுத்தியுள்ளனர். வில்பத்து விவகாரம் உட்பட முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை உடனடியாக பேசித் தீர்க்க ஜனாதிபதி,

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 6, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டின் மரபுரிமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ அரசியலமைப்புக்கு புறம்பான முறையிலோ எந்தவொரு நாட்டுடனோ அல்லது நிறுவனத்துடனோ அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். அவ்வாறு உடன்படிக்கை எதனையும் செய்வதாயின், குறித்த உடன்படிக்கையின் ஆரம்ப நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட பின்னர் அது சட்ட

அரசாங்கத்திற்கு ஜாதிக்க ஹெல உறுமய எச்சரிக்கை

Posted by - January 6, 2017

  வட மாகாண சபை தனது அதிகாரத்திற்கு அப்பாற் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் ஹெட்டிகல்லே விமலசார தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண சபை பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது அதிகாரத்திற்கு அப்பாற் சென்று செயற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண சபையின் அவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சிக்காத பட்சத்தில்,தாம் சட்ட

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இம்மாதம்  நடைபெறும்

Posted by - January 6, 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பாக இன்று காலை யாழ்ப்பாபல்கலைக்கழகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இரண்டாயிரத்து 151 மாணவர்கள் பட்டங்களையும், பட்ட சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் முதலாம் நாள்

பாராளுமன்றத்தில் சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள்- ரணில்

Posted by - January 6, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹொரணவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார். பாராமன்றத்தில் விரைவில் ஒரு அறிக்கையை வெளியிட்ட பின்னர், ஹம்பாந்தோட்டை தொடர்பான எல்லா உடன்பாடுகளின் பிரதிகளையும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்திற்கு தனியார் காணிகள் சுவீகரிக்கப்படாது எனவும் அரச காணிகள்

ஐரோப்பாவின் வொஸ்வெகன் தொழிற்சாலைக்கு சொந்தமான தொழிற்சாலை குளியாபிட்டியில் நிர்மாணிக்கப்படவில்லை- ரணில்

Posted by - January 6, 2017

  ஐரோப்பாவின் வொஸ்வெகன் தொழிற்சாலைக்கு சொந்தமான தொழிற்சாலை குளியாபிட்டியில் நிர்மாணிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹொரணை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வொக்ஸ் வெகன் நிறுவனம் குறித்து சர்ச்சையொன்று காணப்படுகின்றமையினால், அந்த நிறுவனத்தின் முதலீடை நிறுத்துவதற்கு தீர்மானித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கார்களை ஒன்று சேர்க்கும் தொழிற்சாலையொன்றே குளியாபிட்டியவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், வொக்ஸ் வெகன் கார்களும் அங்கு சேகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 6, 2017

  பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் 10 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையிலேயே தமிழக முதலமைச்சர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையில் அண்மையில்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தமிழர் வரலாறு நூல் இன்று வெளியிட்டப்பட்டது (காணொளி)

Posted by - January 6, 2017

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தமிழர் வரலாறு நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. பேராசிரியர் ஞானசிங்கம் எழுதிய தமிழர் வரலாறு எனும் நூல் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெளியீடு செய்யப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா  வடக்கு மாகாண .கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் வடக்கு மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், வடக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர், வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் ஆகியோர்

மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இன்று விடுதலை(காணொளி)

Posted by - January 6, 2017

மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த 12 இந்திய மீனவர்களும், கடந்த டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி தலைமன்னார் தென் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 12 இந்திய மீனவர்களும் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய மன்னார் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிறகோரி விக்ரர், பிச்சையா லிபோர், விக்ரர்

யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை(காணொளி)

Posted by - January 6, 2017

யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 39 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கமைய யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 39 மீனவர்களும் இன்று மதியம் ஊர்காவற்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டு இந்திய துணைத்தூதகரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள்