செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம்
திருவண்ணாமலை அருகே செல்போன் டவரில் ஏறி சமூக ஆர்வலர் போராட்டம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அடுத்த பவித்ரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 38). சமூக ஆர்வலர். இவர், தனது கிராமத்தை பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்ய வேண்டும். ஏரி உள்பட அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

