கவிரதன்

குஜராத்தில் 152 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிப்பு

Posted by - October 26, 2017
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 152 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இச்தையோசோர் எனப்படும் உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வகையான உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 252 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியான மெசோசொயிக்…
மேலும்

சீன ஜனாதிபதிக்கு  டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து

Posted by - October 26, 2017
சீன ஜனாதிபதி க்சீ ஜின்பின் தொடர்ந்தும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டமைக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். கமியுனிச கட்சியின் முழு அதிகாரத்தையும் க்சீ ஜின்பின் தம்வசப்படுத்தியுள்ளார். இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அவரே சீனாவின் ஜனாதிபதியாக தொடரவுள்ளார்.…
மேலும்

ட்ரெவிஸ் சின்னையாவுக்கு பதவி உயர்வு

Posted by - October 26, 2017
கடற்படை தளபதியாக சேவையாற்றி இன்றைய தினம் ஓய்வுப்பெறவுள்ள வைஸ் அட்மிரால் ட்ரெவிஸ் சின்னையா, அட்;மிராலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு இன்று பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ட்ரெவிஸ் சின்னையா கடந்த 35 வருடக்காலங்களாக கடற்படையில் சேவையாற்றியுள்ளார்.…
மேலும்

மஹிந்த அணியும், சுதந்திர கட்சியும் ஒன்றுப்படும் 

Posted by - October 26, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மகிந்த அணியினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தற்போது…
மேலும்

சிறுவர்களின் எதிர்காலம் – அனைவருக்கும் முக்கியம் – ஜனாதிபதி

Posted by - October 26, 2017
சிறுவர்களின் எதிர்கால நன்மையின் பொருட்டு செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்டாரின் டோஹா நகரில் உள்ள ஸ்டெப்பர்ட் பாடசாலைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை…
மேலும்

விமல்வீரவங்சவின் கட்சிக்குள் பிளவு?

Posted by - October 26, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க நேற்றைய தினம் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று கூடவுள்ள கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. கட்சியின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்திற்கு…
மேலும்

கொழும்பில் வீதி மூடல் 

Posted by - October 26, 2017
கொழும்பு 13 – ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாவத்தை சந்திவரையிலான பாதையின் போக்குவரத்து நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் மட்டுப்படுத்தப்படும் என காவற்துறையினர் அறிவித்துள்ளனர். நிலத்தடி நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்…
மேலும்

கைதிகள் தொடர்பில் இன்று மேன்முறையீடு

Posted by - October 26, 2017
அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகள் தொடர்பான மேன்முறையீடு இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். குரல் சிவாஜி
மேலும்

மானஸ் தீவு அகதிகள் துன்புறுத்தப்படுகின்றனர் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - October 26, 2017
பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ் தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கடற்கடந்த விசாரணை கொள்கையின் அடிப்படையில், ஈழ அகதிகள் உள்ளிட்ட…
மேலும்

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு அகதி அந்தஸ்து இல்லை – ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்துக்கு ஆலோசனை 

Posted by - October 26, 2017
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் அகதி விண்ணப்பத்தை நிராகரித்து, அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் ஆலோசனைக் குழுவின் சட்டத்தரணி ஒருவர், இந்த ஆலோசனையை வழங்கி இருப்பதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.…
மேலும்