நிலையவள்

முத்தையன்கட்டுக்குள புனரமைப்புப் பணிகள் தொடர்கிறது..

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சிறிஸ்கந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முத்தையன்கட்டுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வாண்டு காலபோக செய்கை தவிர சிறுபோக செய்கைக்கான நீர்தேக்கமுடியாத…
மேலும்

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசத்தில் ஆறாயிரத்து 439 காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கப்பட்டுள்ளதாக கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலர் பிரிவில் இதுவரை ஆறாயிரத்து 439 பேருக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஏற்கவே இருந்த அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்து வழங்குகின்ற  அடிப்படையில்…
மேலும்

கரைத்துறைப்பற்றில் மலசலகூடங்கள் புனரமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்-பிரதேச செயலர்

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 809 குடும்பங்களுக்கு புதிய மலசலகூட வசதிகளும் 77 சேதமடைந்;த மலசலகூடங்;களை புனரமைத்து கொடுக்கவேண்டிய தேவையுள்ளதாக கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்;டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில்…
மேலும்

ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர் எதிர்கட்சித்தலைவரைச் சந்தித்தனர்(காணொளி)

Posted by - November 1, 2016
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணர்கள் குழு, இன்று எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தகவல் தந்தபோது…..
மேலும்

வடக்கு மாகாண சபையின் மரம்நாட்டு விழா இன்று கிளிநொச்சியில் (காணொளி)

Posted by - November 1, 2016
சொந்த மண்ணில் சொந்த மரங்களை நாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாணசபையின் இவ்வாண்டிற்கான மரம் நாட்டும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கிளிநொச்சி இரணைமடு இடதுகரை வாய்க்கால் வீதியில் தொடக்க…
மேலும்

பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தியில்லை- எஸ்.ரஜீவன்(காணொளி)

Posted by - November 1, 2016
  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பு முழுமையாக திருப்தி கொள்ள முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவ சங்கத்தின் தலைவர் எஸ்.ரஜீவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும்-யாழ் பல்கலைக்கழகத்தினருக்குமிடையில் சந்திப்பு(காணாளி) யாழ். பல்கலைக்கழக…
மேலும்

பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ள யாழ் பல்கலைக்கழகத்தினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல் (காணொளி)

Posted by - November 1, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழகத்தினருக்கும், ஜனாதிபதிக்குமிடையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்…
மேலும்

தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும்வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் – ஜனாதிபதி (காணொளி)

Posted by - October 31, 2016
அனைத்து இனங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். காங்கேசன்துறைஇ கீரிமலைஇ நல்லிணக்கபுரம் கிராமத்தை இன்று பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி…
மேலும்

யாழ்ப்பாணம் சங்கானையில் பேரூந்தின்மீது தாக்குதல்

Posted by - October 30, 2016
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் காரைநகர் சாலைக்கு சொந்தமான பேரூந்து மீது இன்று இரவு 8.30 மணியளவில், சங்கானைப் பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து சங்கானை சித்தங்கேணி ஊடாக காரைநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மீது,…
மேலும்

தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் தேவை-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - October 30, 2016
சிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கொழும்பில் இன்று காலை…
மேலும்